பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0106

பூவேலைப் பாட்டுடன் கூடிய
பெரிய கூடையில்
வைக்கோல் வண்ணப்
பட்டுத் துணிகளை
அவளுக்கு
வாரி வழங்கினேன்.
ஆனால்-
நான் அவளைக்
காதலிக்க முடியாது.

அவளை. . .
ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால்-
அவளுக்கு ஒரு கணவன் இருந்தது
பிறகுதான் தெரிந்தது.

லார்காவின் கதைப் பாடல்களைப் படிப்பதும் அந்தக் கதை நிகழ்ச்சிகளை அனுபவிப்பதும் ஒன்றுதான். தனது கதைப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என் கதைப் பாடல்களின் கருப்பொருள் (theme) புதியது; ஆனால் அதற்குரிய தூண்டுதலைப் பழைய கிராமியப் பாடல்களிலிருந்து பெறுகிறேன்” என்று லார்கா குறிப்பிடுகிறான். இக்கருத்தைச் 'சிறுவெளியின் கதைப் பாட்டு (Ballad of The Little Square) என்ற கவிதையில் அவனே தெளிவுபடுத்துகிறான். அது கேள்வி பதிலாக அமைந்த கதைப் பாடல். 

 
குழந்தைகள் : தெளிந்து
அமைதியாக நடக்கும்
அமுத ஊற்றே!
இந்த முற்றத்தில்
பாட விட்டுவிட்டு
எங்கோ செல்கிறாய்!
உன் வசந்தக் கைகளில்
என்ன கொண்டு செல்கிறாய்?
நான் : ரத்தச் சிவப்பு ரோஜாவும்
வெள்ளைக் குமுதமும்!
குழந்தைகள் : தெளிந்த ஊற்றே!
திரியும் அருவியே!
அந்த மலர்களைப்
பழமையான நமது
பாட்டு நீரில் நனைத்துஎடு!
வேட்கையூறும் உன் செவ்வாயில்
நீ உணர்கிறாய்!