புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்0106
பூவேலைப் பாட்டுடன் கூடிய
பெரிய கூடையில்
வைக்கோல் வண்ணப்
பட்டுத் துணிகளை
அவளுக்கு
வாரி வழங்கினேன்.
ஆனால்-
நான் அவளைக்
காதலிக்க முடியாது.
அவளை. . .
ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால்-
அவளுக்கு ஒரு கணவன் இருந்தது
பிறகுதான் தெரிந்தது.
லார்காவின் கதைப் பாடல்களைப் படிப்பதும் அந்தக் கதை நிகழ்ச்சிகளை அனுபவிப்பதும் ஒன்றுதான். தனது கதைப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என் கதைப் பாடல்களின் கருப்பொருள் (theme) புதியது; ஆனால் அதற்குரிய தூண்டுதலைப் பழைய கிராமியப் பாடல்களிலிருந்து பெறுகிறேன்” என்று லார்கா குறிப்பிடுகிறான். இக்கருத்தைச் 'சிறுவெளியின் கதைப் பாட்டு (Ballad of The Little Square) என்ற கவிதையில் அவனே தெளிவுபடுத்துகிறான். அது கேள்வி பதிலாக அமைந்த கதைப் பாடல்.
குழந்தைகள் | : | தெளிந்து |
அமைதியாக நடக்கும் அமுத ஊற்றே! இந்த முற்றத்தில் பாட விட்டுவிட்டு எங்கோ செல்கிறாய்! உன் வசந்தக் கைகளில் என்ன கொண்டு செல்கிறாய்? | ||
நான் | : | ரத்தச் சிவப்பு ரோஜாவும் |
வெள்ளைக் குமுதமும்! | ||
குழந்தைகள் | : | தெளிந்த ஊற்றே! |
திரியும் அருவியே! அந்த மலர்களைப் பழமையான நமது பாட்டு நீரில் நனைத்துஎடு! வேட்கையூறும் உன் செவ்வாயில் நீ உணர்கிறாய்! |