பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107முருகு சுந்தரம்



 
நான் : என் பெரிய மண்டையோட்டின்
எலும்புச் சுவையை!
குழந்தைகள் : தெளிந்து
அமைதியாக நடக்கும்
அமுத ஊற்றே!
நமது
பழம்புகழ்ப் பாட்டுநீரைப்
பருகிச் செல்:
இந்த முற்றத்திலிருந்து
நீயேன்
நெடுந்துரம் செல்கிறாய்?
நான் : மந்திரவாதிகளையும்
இளவரசிகளையும்
தேடிச் செல்கிறேன்
குழந்தைகள் : கவிஞர்களின் பாதையை
உனக்குக் காட்டியது யார்!
நான் : நமது முதாதையரின்
பாட்டருவியும்
பளிங்கு நீரோடையும்

ரத்தச்சிவப்பு ரோஜாவும் வெள்ளைக்குமுதமும் லார்காவின் புதிய படைப்புக்களுக்கும், பாட்டருவி பழமையான ஆண்ட லூசியக் கிராமியப் பாடல்களுக்கும் குறியீடுகள்.

ஊர்பேர் தெரியாத நாட்டுப்புறக் கவிஞர்களின் கவிதையாற்றலை லார்கா பெரிதும் வியந்து போற்றுகிறான். ஓரிரண்டு வரிகளில் மனிதவாழ்வின் உணர்ச்சி மயமான கணங்களை அபூர்வமாகச் சித்தரிக்கும் அவர்கள்பேராற்றலை நினைந்து நினைந்து மகிழ்ச்சியில் திளைப்பது அவன்வழக்கம்

நிலவு
வேலிக்குள்
அடைக்கப்பட்டது.
என காதலும்
மடிந்தது

இந்த நாட்டுப் பாடல் வரிகளைப்படித்த லார்கா, “நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடும் இந்த இரண்டு வரிகளில் புதைந்து கிடக்கும் சுவையான புதிர் மிக எளிமையானது; சுவையானது; தூய்மையானது. இந்தப் புதிர்ச்சுவை புகழ்பெற்ற மேட்டர்லிங்க் நாடகத்திலும் கிடையாது,” என்று வியந்து பாராட்டுகிறான். உண்மைதான்! இவ்விரண்டு வரிகளில் தோன்றும் மின்னல் வெட்டு, கொடிகொடியாகவன்றோ படிப்பவர் உள்ளத்தில் படர்ந்து பரவசமூட்டுகிறது.

லார்கா தனக்குத் தேவையான மூலப் பொருள்களையும்,