பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்122

ப்ரெக்ட் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மார்க்சீய வாதியாக விளங்கியவர். வறுமைக் காலத்திலும் அக்கொள்கை வழி வாழ்ந்தவர். என்றாலும் கிழக்கு ஜெர்மனியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த ஸ்டாலினிய சர்வாதிகாரம் ப்ரெக்டின் இறுதி வாழ்க்கையில் வெறுப்பையும் சலிப்பையும் தோற்றுவித்திருக்க வேண்டும். கடைசி நாட்களில் ஒரு மறுப்பியல்வாதி (Nihilist) போல் தம்மை ஒரு கவிதையில் காட்டிக் கொள்கிறார்.

வாலிபப் பருவத்திலும்
துன்பம்!
பின்னரும் துன்பம்!
எனக்கு-
மகிழ்ச்சி எப்போது?
விரைவில் கிடைக்கலாம்.
(காலம் மாறுசிறது)



பாதையோரத்தில்
உட்கார்ந்திருக்கிறேன்
காலாகாட்டி
சக்கரத்தை
மாற்றிக் கொண்டிருக்கிறான்
எங்கிருந்து
நான் புறப்பட்டேன்?
எங்கு
போய்க் கொண்டிருக்கிறேன்?
எதைப்பற்றியும்
விருப்பமில்லை
பின் ஏன்-
அவன் சக்கரம் மாற்றுவதைப்
பதற்றத் தோடு
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?