பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்ன...?
கடவுளே!
நான் வந்திருக்கிறேன்.
காதில் விழுகிறதா?
உன் தொப்பியைத்துக்கி
வணக்கம் செய்!

என்று வழிப்போக்கனிடம் பேசுவது போல் ஆண்டவனிடம் துடுக்காகப் பேசுகிறான். கருத்தில் மட்டுமன்று; வடிவத்திலும் சில துணிச்சலான முயற்சிகளை அவன் மேற்கொண்டான்.

கவிதை செறிவாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை எல்லாக் கவிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஜப்பானில் ஹைக்கூவும், தமிழில் குறளும் வடிவத்தால் சிறப்புப் பெற்றவை. மாயகோவ்ஸ்கி மின் வெட்டுக்களைப் போல் பளிச்சிடும் தந்திக் கவிதை வடிவம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கிறான்.

தாகம்-தணிக்க
பசி-தீர்க்க
உடம்பு-இதுநேரம்
போர்ககளம்-போரிட

குண்டுகள் பறக்கட்டும் ,
கோழைகளை நோக்கி
துப்பாக்கி முழங்கட்டும்
எதிரி ஓட

கவிதையை ஒரு ‘வரமாகவும்’ கலைத்வேதையின் கடைக் கண் நோக்காகவும் எல்லாரும் போற்றுவது வழக்கம். ஆனால் ஒரு ருசிய இளங்கவிஞன்,

கவிதையே!
என் துரதிர்ஷ்டமே!
என் செல்வமே!
என் புனிதக் கலையே!

என்று பாடுகிறான். கவிதையைத் ‘துரதிர்ஷ்டம்’ என்று அவன் குறிப்பிடக் காரணம் உண்டு. கவிதை எல்லாருக்கும் புகழையும் செல்வத்தையும் வாரிக் கொடுத்து விடுவதில்லை. நல்ல கவிதை எழுதவேண்டும் என்பதற்காகச் சிலர் தங்கள் வாழ்க்கை வசதியையும், வருவாயையும், மகிழ்ச்சியையும், தியாகம் செய்வதை இன்றும் காண்கிறோம். நல்ல கவிதைக்கு அவர்கள் கொடுக்கும் விலை இவை. எனவே கவிதை, கவிஞனுக்கு ஒருவகைத் துரதிர்ஷ்டம் தானே?

‘இந்தியம்’ சில ஐரோப்பியக் கவிஞர்களால் மதித்துப் போற்றப்பட்டிருக்கிறது. எலியட் தமது சிறந்த காப்பியமான பாழ்நிலத்தை.

தத்தா, தயாதவம், தம்யதா
சாந்தி சாந்தி சாந்தி