பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று உபநிடத வரிகளால் நிறைவு செய்கிறார். இந்தியச் சமயமான பெளத்தத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தென்னமெரிக்கக் கவிஞனான பாப்லோ நெருடா,

அழகிய நிர்வாணப் புத்தர்கள்
மதுவிருந்தைப் பார்த்தவண்ணம்
திறந்த வெளியில்
வெறுமையாகச்
சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

என்று இந்திய நாட்டையும், இந்தியச் சமயத்தையும் கேலி செய்கிறான். இந்நூலில் கூறப்பட்டுள்ள பத்துக்கவிஞர்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வரலாறே புதுக்கவிதை வரலாறு. தரமான கவிஞர்களையும், தரமான கவிதைகளையும் புரிந்து கொண்டு சுவைக்க, இந்நூல், நிச்சயமாக உதவும்.

மேவார் மீராவின் குறிக்கோள் பிருந்தாவனமும் நந்தகுமாரனும்; சிவகங்கை மீராவின் குறிக்கோள் நல்ல நண்பர்களும் நல்ல நூல்களும் நான் அவருக்கு நல்ல நண்பன்; நல்ல நூலும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

சேலம்-16

அன்புடன்

1–1–93

முருகு