பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47முருகு சுந்தரம்

இசை-
சிற்பங்களின் மூச்சு
ஓவியங்களின் பேச்சு
இதயத்தின் வெளிவளர்ச்சி:

பேச்சு மௌனித்து
அவலப் பாதையில்
செல்லும் போது
இடையில் எழும்
செங்குத்துச் சுவர்,

இது-
உணர்வுகளை
ஓசை நிலமாக ஆக்குவது.

[துண்டுப் பாடல்-
டியூனோ இரங்கற்பா]

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்கள் அல்லாமல் ‘புதுக் கவிதைகள்’ (The New Poems) என்ற நூலையும் ரில்க்கின் படைப்புகளுள் முக்கியமான ஒன்றாகக் குறிப்பிட வேண்டும். இதில் உள்ள கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக முறையே 1907, 1908 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. சிறுத்தை (The Panther) பியானோ பயிற்சி (Piano Practice), லீடா (Leda) வெனிசில் காலங் கடந்த இலையுதிர்க் காலம் (Late Autumn In Venice), ஸ்பானிய நடனமங்கை (Spanish Dancer) ஊதாரிப் பிள்ளையின் புறப்பாடு ( The Departure of The Prodigal Son) என்ற புகழ் பெற்ற கவிதைகள் இத்தொகுப்புக்களிலேயே உள்ளன. முதலில் குறிப்பிட்ட கவிதைகளுக்கும், இந்தப் புதுக் கவிதைகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடுண்டு. இக்கவிதைகளில் பார்ப்பவரின் உள்ள உணர்வுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், பார்க்கப்படும் பொருளின் தோற்றம், தன்மைப் பற்றியே ரில்க் அதிகமாகச் சிந்திக்கிறார்.

ரில்க்கின் கவிதைகளைக் கூர்ந்து கவனித்தால், அவருடைய படிப்படியான வளர்ச்சியும், அவர் எப்படிப் பட்டவர் என்பதும் புலனாகும். ரில்க் இளமையிலிருந்தே தனிமை விருப்பமுள்ளவர்; எதையும் கூர்ந்து பார்க்கும் பழக்கம் உடையவர்; மால்டே லாரிட்ஸ் பிரிக் குறிப்புகளில் ‘தன் முனைப்புமிக்க மனிதர்’ (obstinate man) ஒருவரைப் பற்றிய குறிப்பு ஓரிடத்தில் வருகிறது. அம்மனிதர் நாடக ஆசிரியர் இப்சன் என்றும், ஓவியர் ரோடின் என்றும் ஆய்வாளர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றனர். அந்த மனிதரிடமிருந்தே ‘தீவிரமாகக் கூர்ந்துபார்’ என்ற பாடத்தைத் தாம்கற்றுக் கொண்டதாக எழுதுகிறார் ரில்க்.

சிற்பி ரோடின் மிகவும் கண்டிப்பானவர்: யாரிடமும் எளிதில் ஒத்துப்போகாதவர். அவரிடத்தில் செயலாளராகப் பணி