பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

950முருகு சுந்தரம்



ஏமாற்றத்தின் கொடுமையைக்
கடைசி முறையாக
நான் அழுது தீர்க்கிறேன்

உழைத்துச் சலித்த எருது
தண்ணீரில் படிந்து
தன் தளர்ச்சியை
நீக்கிக் கொள்ளும்,
எனக்கோ-
உன் காதல் கடலைத் தவிர
முழகுவதற்கு
வேறு இடமில்லை.

ஆனால் -
வழியும் கண்ணீர்
என் பாதையை மறைக்கிறது.
களைத்த களிறு
களைப்புத்தீர விரும்பினால்
சூரியச் சூடேறிய மணலில்
சுகங்காணப் புரளும்.

எனக்கு
இதமான
சுகச்சூடுதரும் சூரியன்
உன்னையன்றி வேறில்லை.

ஆனால்-
இப்போது
உன்கையில் விளையாடும்
காதலன யாரென்று
என்னால்
ஊகிக்க முடியவில்லை.

(அன்பு லில்லிக்குப் பதில் கடிதம்)

நமக்கு மாயகோவஸ்கியின் காதல் விவகாரம் அவ்வளவு முக்கியமில்லை, இக்காதல் தோல்வியினால் ஏற்பட்ட தாக்கம் அவன் இலக்கியத்தைப் பெரிதும் பாதித்தது. மாயகோவஸ்கியின் காதல் தோல்வி பெற்றெடுத்த காற்செராய் அணிந்த மேகம்(Cloud in Pants) இது (it) , அன்பு லில்லிக்குப் பதில் கடிதம் என்ற கவிதைகள் மூன்றும் உணர்ச்சி மிக்க காதற் கவிதைகள். இவற்றுக்கு ஒப்பாக ஒரு சிலவற்றையே உலக இலக்கியத்தில் தேடிப்பிடிக்க முடியும். காதல் தோல்வி மாய கோவ்ஸ்கியை ஆயிரம் யானை பலத்தோடு கிளர்ந்தெழச் செய்தது. ஏழைகளின் காதலைக் கூட ஈவு இரக்கமில்லாமல் தட்டிப்பறிக்கும் முதலாளித்துவ சமுதாயப் பின்னணியைத் தன் தீக்கண்களால் உறுத்துப் பார்த்தான். அதைநோக்கி.-


நான்-
என்னைப் பொறுத்தவரை