கவிஞர் சுரதா
55
மதுரத் தமிழ் காக்கும் மயிலை சிவமுத்து
எளியநடை; எளியஉடை; எளிய வாழ்க்கை;
எப்போதும் தமிழ்மொழியை வளர்க்குந் தொண்டு;
வெளிநடிப்பை, விளம்பரத்தை, விரும்பா உள்ளம்;
வித்தைக்கு முத்து; இவர் மயிலை முத்து.
பிளவுதனை உண்டாக்கும் சாதி பேதப்
பிரிவினையை எதிர்கின்ற வடலூர் வள்ளல்.
விளக்கேற்றி வைத்துவரும் பெரியார்; கல்வி
விழிப்புதனை உண்டாக்கும் பாண்டி வேந்தன்!
நெருப்புக்குப் புகைஉண்டு; ஆனால் விண்ணில்
நீந்துகின்ற கதிருக்குப் புகையேன் இல்லை ?
இரவினிலே தாமரைப்பூ தூங்கு வானேன் ?
இலைப்பந்தல் போடுகின்ற மரங்கள் யாவும்,
தரைமீது நடக்காமல் நின்று கொண்டே
தவிப்பானேன் எப்போதும் ? என்று பிஞ்சுப்
பருவத்தில் தன் தந்தை இடத்தில் கேட்டுப்
பகுத்தறிவுத் திறமைதனை வளர்த்த மேதை!