உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ்மாலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

புகழ்மாலை


பேரறிஞன் உமர்க்கய்யாம், “பெண்ணே பாரில்,
               பெரும்போதைப் பொருளென்றான் இவரும் சொன்னார்,
ஊருக்கு உழைப்புதூன் “யோகம்” என்று
               உரைத்திட்டார் பாரதியார் இவரும் சொன்னார்.
ஆரியத்தில் சிக்காதீர் உலகீர்–என்றார்,
              அருட்பாவில் ராமலிங்கர். இவரும் சொன்னார்.
வேரறுக்கும் இப்புரட்சிக் கவிஞர், கற்றார்
              விரோதத்தைச் சர்க்கரையென் றெண்ணும் மன்னர்.

தேரிழுக்கும் தேசத்தில், தருமன் போன்று,
              சீட்டாடும் அரசாங்கந் தானிருக்கும்.
வாரிருக்கு, தோலிருக்கு, என்னும் நந்தன்
             வம்சத்தான் அந்நாட்டில் உள்ள மட்டும்
ஏரிழுக்கும் எருதொன்று தொலைந்தால், அந்த
             இடைவேளை உழவுக்கு அவனே மாடு.
ஆரியத்தை ஆதரிக்கும் ஆண்டிப் பாட்டே
             அந்நாட்டின் அரசாங்கப் பாடலாகும்.

இவ்வாறும்–இவை போன்று இன்னும்; மாந்தர்க்
             கெத்தனையோ சிந்தனைகள் தந்த சிங்கம்,
செவ்வாழை மரம்போன்று; தனக்குப் பின்னர்
             செவ்வாக்குப் பரம்பரையை வைத்தி ருப்போன்.
எவ்வாறு பார்த்தாலும், இவர்க்கு ஈடு
             இவரேதான். இதுவரையில், கிளிகள் கொத்திக்
கெளவாத கொய்யாவும் இல்லை, இன்னார்க்
             கவிதைகளை வெறுப்பாரும் நாட்டில் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/64&oldid=1871904" இலிருந்து மீள்விக்கப்பட்டது