பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘காமாட்சியா பிள்ளை கடையில் ராமலிங்கம் மறுபடியும் வேலையில் சேர்ந்து விட்டான் என்ற சேதி எங்கும் பரவ வெகுகாலம் தேவைப்படவில்லை. -

அந்தக் கடையை விட்டால் அவனுக்கும் வேறே போக்கு கிடையாது. அவனை விட்டால் அவருக்கும் வேறே நல்ல ஆள் கிடைக்காது” என்று ஊர்காரர்கள் பேசிக்கொள்ளத் தவறவில்லை.

‘இந்த மட்டுக்காவது அவுகளுக்கு நல்ல புத்தி வந்ததே! என்று சிறிதளவு சந்தோஷம் கொண்டாள், ஸ்ரீமதி ராமலிங்கம் எனும் சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்த செல்லம்மா.