பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் • 225

இத் தருணத்தில், தனக்குத் தெரிந்த மனிதர் யாரையாவது காண வேண்டும் என்றொரு விசித்திர எண்ணமும் அவன் உள்ளத்தில் நெளிந்தது. -

சில சமயம் அதிசயமாக மனிதரின் ஆசை - கனவு அல்லது தீவிர எண்ணம் - நிறைவேறி விடுவதும் உண்டு. பெருமாளுக்கும் அப்படி ஒரு பேறு வாய்க்க வேண்டும் என்றிருந்தது.

பெருமாளின் ஊர்க்காரனான கைலாசம் எதிரே வந்து கொண்டிருந்தான். உயரே இருந்து இறங்கி வரும் ஏதோ உருவமாய்த் தோன்றி, பிறகு அது ஒர் ஆள் எனத் தெரிந்து, அது அட, நம்ம கைலாசம்’ என்று பெருமாளுக்குப் புரிவதற்கு, சிறிது நேரம் தேவைப்படத்தான் செய்தது.

அப்பவும் பெருமாளின் அழுகை தொடர்ந்து கொண்டு தானிருந்தது.

கைலாசம் நெருங்கி வந்ததும் வியப்புடன் பெருமாளைப் பார்த்தான். அவனிடம் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு. ‘என்ன பெருமாள்? என்ன விஷயம் ? என்று கேட்டான். -

பெருமாள் மலையையும் சரிவுகளையும், பக்கத்துப் பள்ளத்தாக்கையும் பார்த்தபடி நின்றானே தவிர, தன் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லும் திராணியைப் பெற்றானில்லை. -

‘என்னடே, இங்கே எப்படி வந்தே? ஏன் அழுகிறே?” என்று பரிவுடன் விசாரித்தான் கைலாசம்.

ஒண்ணுமில்லே! என்று ! முணுத்தான் பெருமாள்.

கைலாசம் சிரித்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். “நாங்க பூசை செய்யவேணும்னு நேற்றே புறப்பட்டு

15