பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

111


தகுதியில்லாதவள் என்று சமயசாத்திரம் கற்பிக்கும் அநியாயம்!

கணவனின் உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு ஆண்மகவைப் பெறாத மனைவியைச் சமயக் குருக் கொழுந்துகள் நடத்தும் அநாகரிகங்கள் சொல்லுக் கடங்காதவை. துயரச் சூழலில் அந்தத் தாய், ஊமையாகிப் போவாள்; செயலற்றுப் போவாள்.

எனவே, வயிற்றுக் கரு பெண் எனத் தெரிந்தவுடன் கலைத்துவிடத் துணியும் தாய்மாரின் மனநிலையை, சமயபீடத்தில் இருந்து அருளுரையும் ஆசி அறிவுரையும் நல்குபவர்களால் புரிந்து கொள்ள முடியுமா?

‘பெண் சமஉரிமை பேசலாகாது’ என்பது ஆதார சுருதி என்று முழங்கும் சமய மரபு, அவன்மீது என்றும் குற்றம் காண்பதில்லை. ‘ஆடவன் தொடுவான்; குலைப்பான். இவளே அடங்கி இருக்க வேண்டும்.’

‘வேலைக்குச் செல்லும் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரும் ஒழுக்கம் காக்காதவர்கள்’ என்று (அ)யோக்கிய சிகாமணிக்களுக்குச் சான்றிதழ் வழங்கும் குருபீடங்கள், இவர்கள் ஊன்றி வளர்த்த வேரில் இருந்தே கிளைத்துச் செழித்திருக்கும் பெண் சிசுக்கொலை, கருஒழிப்பு போன்ற நச்சுக்கனிகளை எப்படி அகற்றப் போகின்றன?

பெண்ணின் நல்வாழ்வுக்கான வாயில்களை, பல்வேறு தடைகளால் அடைத்த பின், சுற்றிக் கிளைத்தெழும் பூண்டுகளை எப்படி அகற்றப் போகின்றனர்?

‘தினமணி’
28-5-2001