பாரதி - சித்தன் 209
“நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்; அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்; வேண்டாதனைத்தையு நீக்கி வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே.” -
(பாரதி கவிதைகள்)
இவ்வரிகள் அனைவரும் பொன்னே போல் போற்ற வேண்டியவை ஆகும். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை சிற்றுயிர்கள் அறிய முடியாது. ஆகையினால் மணிவாசகப் பெருந்தகை,
வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்டு முழுவதுந்
தருவோய் நீ (திருமுறை: 8,83,5)
என்று இதே கருத்தைக் கூறுவதைக் காணலாம். இன்னும் ஒரு படி விளக்கமாக கவிச்சக்கரவர்த்தி இதனைக் கூறுகிறார்.
- - - o ‘o - - - யாஅம் இரப்பவை பொன்னும், பொருளும், போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் - உருள் இணர் கடம்பின் ஒலிதாரோயே
(பரி பாடல்-5)
என்று பாடுவதைக் காணலாம். அன்றாட வாழ்விற்கு வகை செய்து கொள்ள முடியாமல் தவித்த இக்கவிஞன், விநாயகப் பெருமானிடம் பொன்னை,