பக்கம்:புதிய கோணம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புதிய கோணம்

செலுத்தும் பாதைதாம் என்றும் உள்ளுணர்வால் நம்பி உணரும் ஒருவரே சமரச ஞானியாய் இருத்தல் கூடும். திரு.வி.கவின் இராமலிங்கர் திருவுள்ளம்: என்னும் நூலைப் படிப்பார்க்கு இவ்வுண்மையும் அவருடைய கருத்துக்களும் நன்கு விளங்கும்.

இற்றை நாளில் சீர்திருத்தம் பேசுவது எளிது; அது மதிப்பைத் தருவதுங்கூட. ஆனால் நாற்பது ஆண்டுகட்கு முன்னர் சீர்திருத்தம் பேசுவதும், கலப்பு மணத்தை ஆதரிப்பதும், அனைவருடனும் சேர்ந்து உணவு உண்ணுதலும் அவ்வளவு எளிமையான செயல்களல்ல. ஆனால் திரு.வி.க. இவை அனைத்தையும் அஞ்சாது செய்த வீரர்.

அவருடைய உடலமைப்பும், பேச்சு முறையும், ஏன் மனநிலையுங்கூடப் பெண் தன்மையுடையவை. அவ்வாறு இருந்ததனுடன் தனிப்பட்டவர் துன்பங் கண்டு பொறாத மனமுடையவர். இரத்தத்தைக் கண்டால் மயக்கமுறும் அளவுக்கு மென்மை படைத் தவர் திரு.வி.க. அவருடைய இம்மென்மைத் தன்மை யால் பலர் அவரை ஏமாற்றியதும் உண்டு. ஏமாறு கிறோம் என்று அறிந்திருந்தும் சிறிதும் வருத்தம் கொள்ளாமல் மீண்டும் கருணை காட்டும் தாயுள்ளம் படைத்தவர், இராயப்பேட்டை முனிவர். தாய்மை அன்பு காரணமாகவே, குட்டிகட்குத் தீங்கு விளைவதைக் கண்டால் வன்மையற்ற பெண் பூனையும் சீறி விழுந்து சக்திக்கு மேற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/232&oldid=659948" இலிருந்து மீள்விக்கப்பட்டது