46 புதிய கோணம்
மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப்பட்டிருப்பினும் அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். இல காலத்திற்கு முன்பு கள்ளச் சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணுமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப்பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனைபேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கட்டத்தைச் சேர்ந்தவர்களேயாவர்.’ -
இவரினும் வேறுபட்ட் ஒரு கட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலிபோன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும் அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்து விட்டமையின் அதனை உண்ணாமற் சென்று விட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணன விடத்துப் பசியையும் பொறுத்துக் கொள்கிற புலி,