கபிலரும் பாரியும் , 77
என்றுதான் பெயர். அந்தப் பல்லி என்ற களையை வேரோடு பிடுங்கி, நன்கு கவனிப்பதால், கருகரு என்ற இலையுடன், கரிய தண்டு நீண்டு, அடியிலிருந்து நுனி வரை கதிர் முற்றி வருகிறதாம். அதற்குப் பக்கத்திலே தினை, எள் முதலியவற்றைப் பயிரிட்டு, அவைகளும் பதமானவுடன் அறுவடை
செய்து வைத்திருக்கிறார்களாம். அவரைக்காய் இருக்கிறதே-கொழுகொழு அவரை என்று சொல்லுவார்கள்-அந்தக் dosrulf பறித்து,
அதிலேயுள்ள விதையை எடுத்து, நெய்யிலே வறுக்கிறார்களாம். அது சடபுட’ என்ற சப்தத்தொடு வறுபடுகிறதாம். அதையும், இதையும் உண்ணுகிறார் களாம். உண்ட பிறகு, வீட்டுத் தலைவி பாத்திரத்தைக் கழுவுகின்றாளாம் மிக்க சப்தத்தோடு, அந்தச் சப்தத்தைப் பாடலிலே அப்படியே கொண்டு வருகிறார், கபிலர்.
‘வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டிரத்துப் பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடியி பல்கிளைச் செவ்விக் களைகால் கழலிற் றோடொலிபு நந்தி மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக் கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து வாலிதின் விளைந்த புதுவர கரியத் தினைக்காய்யக் கவ்வை கறுப்ப வவரைக்