டாக்டர் இராசமாணிக்கனுர் 17
பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டுதோறும் வைகாகி விழாவில் தஞ்சை இராசராசேசுவரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசயராசேந்திர ஆசாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது. * இராச ராசன் தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனைவியர் அக் கோயி லுக்கு அளித்த நிவந்தங்கள், அக் கோவிலேப்பற்றிக் கருவூர்த்தேவர் பாடியது போன்ற பல செய்திகள் இந் நாடகத்தில் பல காட்சிகளாக அழைந்திருக்கலாம்.
விக்கிரமாதித்த ஆசாரியன் என்று இராசராச நாடகப் பெரியன் என்பவன் பந்தனை நல்லூரில் கட்டு வப் பங்கு, மெய்மட்டிப் பங்கு (நாடகக் காணி) இவற் றைப் பெற்றவனுய் இருந்தான் என்று அவ்வூர்க் கல் வெட்டுக் கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனப் பற்றியது) என ஒன்று இருந்தது. அக் நாடகம் நடிக்கப்பட்டது என்பன அறியலாம்.
இந் நூலில் இராசராசனது இளமைப் பருவம், அவன் அரசன் ஆனமை, போர்ச் செயல்கள், ஆட்சி முறை, இராசராசேசுவரம் எடுப்பித்தமை, திருமுறை களேத் தொகுத்தமை, முதலிய செய்திகள் பல காட்சி களாக இடம் பெற்றிருக்கலாம்.
முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப் பட்டது. செய்தவனுக்கு பரிசு
% S. I. I. 2, 67. $ தமிழ்ப் பொழில், தொகுதி. 23, பக்-152'-3.