பக்கம்:புதிய தமிழகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புதிய தமிழகம்

பெற்றேர் அறிய மணந்து வாழும் வாழ்க்கை 'கற்பு” எனப்படும். களவு மணம் குறிஞ்சித் திணை என்றும், கண வன் மனைவியை வீட்டில் விட்டு ஒரு காரணமாகப் பிரி தல் பாலத்திண் என்றும், அப்பிரிவில் மனைவி ஆறுதல் பெற்றிருத்தல் முல்லை என்றும், மனேவி கணவனேடு கற்பு மணத்தில் வாழ்தல் மருதம் என்றும், கணவன் ஒரு காரணமாகப் பிரிந்து சென்ற பொழுது மனைவி இாங்குதல் நெய்தல் என்றும் பெயர் பெறும். இந்த ஐவகை ஒழுக்கங்களையும் பற்றிய பாடல்களே அகப் பாடல்கள் என்று பெயர் பெறும்.

அகநானூறு கணவன் தன் இல்லற வாழ்க்கையில் கற்பதற் காகவும், வாணிகத்திற்காகவும் வேறு அலுவல் காரண மாகவும் மனைவியை விட்டுப் பிரிதல் உண்டு. அங்ஙனம் அவன் பிரிந்து சென்று மீண்டதும், தான் சென்ற ஊர்களில் அல்லது நாடுகளில் தான் கண்ட சிறந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும், தான் கேட்ட சிறந்த நிகழ்ச்சிகளையும் தன் இல்லத்தாரிடம் கூறுவது வழக் கம். இங்ஙனம் கூறப்பெற்ற செய்திகளில் பல நாட்டு வரலாற்றுச் செய்திகள் அடங்கும்; பல ஊர்களின் இயற்கைச் சிறப்பும் பொருளாதாரப் பொலிவும் பிற வும் அடங்கியிருக்கும். அவன் இல்லாத பொழுது அவன் மனைவியும் தோழியும் அவை பற்றிப் பேசுவ துண்டு. o

பாடலிபுரம்:

சந்திரகுப்த மெளரியன் அரசன் ஆவதற்கு முன்பு பாடலியைக் கலைநகராகக் கொண்ட மகத நாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/66&oldid=641938" இலிருந்து மீள்விக்கப்பட்டது