பக்கம்:புதிய தமிழகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனுர் 79

வெல்லும் வழிகளே அவன் மனம் ஆராய்ந்தது. அவ் வேளை இளந்தத்தர் அரசர் தெருவழியே வந்தார்; நெடுங்கிள்ளியின் பார்வைக்கு இலக்கானர். சோழன் நலங்கிள்ளியின் ஒற்றருள் ஒருவனே இவன் என நெடுங் கிள்ளியின் நெஞ்சு துணிந்தது. வறுமையெனும் இரு ள ல் புலமையெனும் ஒளி மறைக்கப்பட்டு மாசுண்ட மணிபோல் வந்த தத்தரைப் பிடித்து வர ஏவலாளரை அனுப்பினுன் வேந்தன். போர் என்னும் அச்சமே மன்னன் மனத்தில் கிலவியது; அச்சம் நிறைந்த அவன் மனம் புலவரைபுலவராகத் தெளியவும் இயலாமல் ஒற்றனெனவே துணிந்தது. இவ்வொற் றனை வெட்டி, வீழ்த்தினுல் தான் நாம் உய்வோம்' என எண்ணிய வேந்தன், புலவரைக் கொல்ல வாளே உருவி ஓங்கின்ை. உடுக்கை யிழந்தவன் கைபோல ஆண்டு ஒடி வந்து மன்னன் கையைப் பற்றி நிறுத்தி கின்ரும் கோவூர் கிழார்.

கோவூர் கிழார் அறிவுரை

மன்ன! என்ன க ச ரி யம் செய்யத் துணிந்தாய்! ஆண்மை இருள் கின் அறிவுக் கண்ணே மறைத்தது கொல் புலவர் வாழ்க்கையை நீ அறிவாயோ? பழுமரம் நாடும் பறவை போல வள்ள%ல நாடும் தெள்ளியோர்கம் வறுமையிற் செம்மையை நீ உணர்வாயா? அரிய நெறி களையும் நெடிய வெனக்கருதாமல் வள்ளலே நாடி யடைந்து கற்றது பாடிப் பெற்றது கொண்டு சுற்றம் அருந்தி மற்றது காவாது உண்டு வழங்கி உவந்து வாழும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குக் கொடுமை நினைந்தறியுமா? அறியாதன்றே! வறுமையில் வாடினும் பெருமிதத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/79&oldid=641951" இலிருந்து மீள்விக்கப்பட்டது