பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * - s - s , து.கோ. சண்முகம் - 4 வேளைக் கொரு வித ஒப்பனை செய்வாள்! பாளைச் சிரிப்பும் தாளக் குமிழ்களும் சுருங்கியதே இல்லை! தொய்ந்ததே இல்லை! நெருங்கும் பொழுதிலும் விலகிய போதும் நேத்திரம் நெஞ்சில் சித்திரமாய் நிற்பாள்! சாத்திரப் புத்தியும் அத்தாசிக் குண்டு அவளது ஜாதக அமைப்பில் கேது தவறாய்ச் சுக்கிரனுடன் சேர்ந்து இருந்ததும் சப்தம பாவத்தில் சனிபோய் அமர்ந்ததும் தப்பித மாகத் தகாத வழியில் அவளைத் தள்ளியதாய் அங்க வாய்ப்பாள்! தவளைக்குக் கூட ஜாதகம் உண்டென்பாள்!