பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 புதிய தெய்வம் பாவம் தொலைக்கவும் பொல்லா சனியின் கோபம் குறைக்கவும் சனிக்கிழ மைகளில் எண்ணெய் முழுக்குத் தவறாது செய்வாள்! கண்களில் பட்டக் 'கிராக்கி’களை விடுத்தும் பக்கத் திலிருந்த துர்க்கைக் கோயிலில் நெக்குருகப் புலம்பி நெய்தீபம் போட்டு அன்றைய இரவில் அவ்வா லயத்தை ஒன்றிய திடலில் ஒண்டியாய் படுத்துக் கழிப்பாள் களிப்பாள்! காற்றை மழையைப் பழிப்பவர் தம்மைப் பொருட்படுத்த மாட்டாள்! காலையில் ஒரு கப்" மாலையில் ஒரு கப்" சாலைக் கடையில் 'ஏலக்காய் சாயா'