பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 - புதிய தெய்வம் சேவையே தேவை!" என்று முழங்கி இறங்கிப் போனார். "அக்கார வடிசலில் அப்பளம் போளியில் சர்க்கரை வட்டில் சப்பாத்தி குருமாவில் இடம் வலம்மேல் கீழ் இன்றி இருப்பவர் கடவுளே அன்றோ? காண்போம் இதனை!” என்று காட்பரீஸ் குரலில் பேசி நின்ற படியே விடையும் பெற்றார் நகரின் தங்கும் விடுதிக் காரர்! வழக்குரைஞர் ஒருவர் வந்தார் மேடைக்கு! கிழக்கையும் மேற்கையும் கிழித்துப் போட்டார். "சட்டம் என்பதே சர்வேஸ்வரன் குரலாம்! 'கட்டாய பக்தி'