பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 _______________புதிய தெய்வம்

ரோஜா மேனிக் கவிஞர் முழங்கினார்! "அல்ட்ரா மாடர்ன் இன்ஸ்ப்ரேஷன் இல்லை! கல்ச்சுரல் லைஃபே கம்ப்ளிட்டாய் குளோஸ்! கடவுள் கடவுள் என்றால் அவன் யார்? மடையர்கள் தின்னும் மசால்வடைச் சரக்கா?

மனிதன் சிரித்தால் மகேஸ்வரன் ஆவான்! புனிதன் காந்தியின் பொக்கைச் சிரிப்பில் கடவுளின் ஜாகையைக் காண வில்லையா? நடைமுறை சமூகம் நலமுற வாழ தேசமே தெய்வமாய் தினமும் துதிப்போம்! துசைத் துடைத்த இதயம் தேடுவோம்: என்றே கவிதையை இசைத்து படித்தார்!