பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * * * * . வ.கோ. சண்முகம் - 12 அடுத்தொரு கவிஞர் அபிநயம் பிடித்தே கடைத்தெரு மொழியில் கடகட வெனவே அடுக்கினார் கவிதை அவியல் கூட்டை, “தடுக்கி விழுந்தால் 'குவா குவா தானோ? கடைசிப் பிள்ளையே கடவுள் என்பேன்! படைப்புளை - நமது படைப்புகளைத்தான் சொல்கிறேன் - இன்றே சுருக்கக் கொண்டால் நல்லது என்பேன்! நாகரிகம் என்பேன்! வயல்களில் தரிசு! வயிறெலாம் புதுசா? கயல் விழித் தாய்மார் கவனிக்கட்டும்! என்று முழங்கி இறங்கி விட்டார்: நின்றதால் இரைத்தது அவர்நெடு மேனி! அடுத்த தாக