பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகா. சண்முகம் - 28 என்பதை அறிந்து சமயம் பார்த்து சிறப்பு அர்ச்சனை செய்து அம்பிகை பிரசாதம் கொடுத்தார்! கைகால் அசைக்கும் பொம்மை யாக அமைச்சரும் அதனை வாங்கிக் கொள்ள வந்தவர் எல்லாம் வாழ்த்தினர் அவரை! சர்க்கரைப் பொங்கலும் வாழைப் பழங்களும் முறுக்கு சீடைகள் குருக்கள் கொடுக்க ஒருசிலர் வாங்கி உள்ளே தள்ளினர்! வெறும்வயிற் றுடனே மற்றவர் களைத்து விடியும் வேளைக்காய்க் காத்துக் கிடந்தனர்! கொடியோர் இன்னும் கோயில் அருகிலே இருப்பதை அவர்கள்