பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41 - புதிய தெய்வம் . . . . . . . . . . . . . வாசம் பிடித்து வந்து விட்டனர்; இளைஞன் கெஞ்சலாய்க் கெஞ்சினான் அவர்களை! "களைத்து மயங்கி உள்ளே கிடப்பவர் குழந்தைகள் தாய்மார் கிழவர் களேதாம்! விழுந்ததைக் கூட எடுக்காமல் வந்தோர் நகையோ நட்டோ பணமோ பண்டமோ வகையாய் எதுவும் இல்லை!” என்றான்.

வெளியே இருந்தவர் வெடிச்சிரிப் புதிர்த்தனர்! 'அளக்கி றாயா மச்சான் டேக்கர்! எல்லாம் தெரியும், எழுபது லட்சம் உள்ளே இருக்குடா! வெளியே விரட்டு! இல்லை, கோயிலை இரண்டே நிமிஷத்தில் சல்லி சல்லியாய்