பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 -புதிய தெய்வம் இளைஞனை மட்டும் தன்னுடன் வாவென விளித்துக் கதவுப் பக்கம் நடந்தாள். கோயிலில் இருந்தவர் வாய்கள் அடைத்தன! எல்லோர் கண்ணிலும் பொங்கிற்று வெள்ளம்! பருவதம் கூட விக்கி விம்மினாள்! இருந்தவர் அனைவருக்கும் இராத ஒன்று நெஞ்சினுள் புகுந்து நெருடியது எதையோ? அஞ்சிய ஆபத்து அப்பால் சென்றது ஆயினும். ஆயினும். அனைவரும் மொத்தமாய் நேயமாய் பந்தமாய் நெருக்கமாய் உயிர்ப்பாய் பிணைந்த ஒன்றை பிரிந்ததே போல 21' அணைத்த தென்றலை அகற்றினாற் போல .