பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது மாணவ ஆசான் வ.கோ.சண்முகம் சிறந்த தமிழ்தும்பி ,கோமல் ரங்கசாமியான என்னை அரங்கண்ணல் ஆக்கியது அவர்தான். அவருடைய விடுதான் எங்கள் குகை. திருவாரூர் சாமா, திருக்குவளை கருணாநிதி, விஜயபுரம் செல்லக் கணபதி, குளக்கரை சீனுவாசன், மற்றும் நான் உட்பட இந்த மாணவப் பட்டாளம் இந்தத் தமிழ்க் குகையில்தான் அடிக்கடி கூடும். வசதியான வாழ்வு அப்போது வ.கோ.சண்முகத்துக்கு அமையாதிருந்தால் இன்று அவர் கவிஞருள் கவிஞராகவோ அல்லது இன்னொரு கருணாநிதி யாகவோ இருந்திருக்கக் கூடியவர். இராம. அரங்கண்ணல் (சுரதா- பொங்கல் மலர் - 19