பக்கம்:புதிய பார்வை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 42 புதிய பார்வை

நாலு பேருக்கு நடுவில்

புதிய மனிதர்கள் நாலு பேருக்கு நடுவில் ஒருவன் எப் படிப் பேசிப் பழகுகிருன் என்பதை அறிந்து கொண்டும் அவனுடைய இங்கிதம் எப்படிப்பட்டதென்று கணக்கிட லாம். பத்துப் பன்னிரண்டு மனிதர்களேச் சேர்ந்தாற். போல் எதிரே சக்தித்து விட்டால் பேசிப் பழகுவதற்குக் கூசி அசடு வழிகிற கிலேயை அடைவார்கள் சிலர். ஒரு மனி தனைச் சந்திக்கும்போது எவ்வளவு பக்குவமாகவும், இங்கித மாகவும் பழகமுடியுமோ, அ வ் வ ள வு பக்குவமாகவும் இங்கிதமாகவும் நூறு மனிதர்களைச் சக்திக்கிறபோதும் பழகமுடிந்தவன் எவனே அவ ன் ஏதோ ஒரு வகையில் இந்தச் சமூகத்துக்குத் தலைவகைத் தேர்ந்தெடுக்கத் தகுங் தவன். அவனுடைய சுற்றுப்புற உணர்ச்சி அதிமானது; மதிக்கத் தகுந்தது.

சுற்றி இருப்பவர்களுடைய சுகதுக்கங்களேயும் அங்த ரங்கங்களையும் நன்ருகப் புரிந்து கொண்டு அதற்கேற்பப் பழகுகிறவன்தான் வாழும் இடத்துக்கே ஓர் அணிகலன்னப் போன்றவன். இப்படிப் பழகுகிறவர்கள் நூறு பேர்கள் இருந்தால் அவர்கள் தாங்கள் இருக்கிற ஊருக்கே பெருமை யைத் தருகிருர்கள்.

வறுமையும், ஏக்கமும், வாழ்க்கைத் துன்பங்களும் கிறைந்த பத்துப் பேருக்கு நடுவில் தன்னுடைய சுகபோகங் களையும் ஆடம்பரங்களேயும் காண்பித்துக் கொள்ள ஆசைப் படுகிற ஒருவன் இருந்தால் அவன் சுற்றுப்புற உணர்ச்சி இல்லாதவனே! தன்னுடைய சுகம் சுற்றி வாழ்கிற பத்துப் பேருடைய மனத்தைத் துன்புறுத்தும் என்று தெரிந்திருங் தும் அதை அந்தப் பத்துப் பேரும் கண்டு குமுறுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்கிறவனே என்னவென்று சொல்வது? மனிதன் தனியாக வாழவில்லை. சமூகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/144&oldid=598236" இலிருந்து மீள்விக்கப்பட்டது