பக்கம்:புதிய பார்வை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"H 44 புதிய பார்வை

ஆரோக்கியமான சூழ்கிலே ஆகாது. பலர் வேதனைப்பட அதன் விளைவைச் சிலர் அனுபவிக்கிற கியாயமில்லாத சுகங் கள் இனிமேல் வளர்ந்து வரும் புதிய சமுதாயத்தின், பொய்யாய்ப்போய் வி டு ம். நாகரிகமும் பண்பாடும் உள்ள சமூகத்தில் இப்படி அடைகிற சுகம் வெறுக்கத்

தக்கது.

'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்-இங்கு

வாழும் மனிதருக்கு எல்லாம்' என்று கவி இதயம் படைத்தவன் துணிந்து சொல்லும் போது இந்தச் சொற்களில் ஆவேசமும். அழகும், கியாய மும் சேர்ந்து தெரிகின்றன. இதே வார்த்தைகளைப் பசித் துக் கிடக்கிற ஒருவன் குமுறக் குமுறச் சொல்லும்போது அந்தச் சொற்களிலே அழகும் கவிதைத் தன்மையும் இருக்

காது. ஆவேசம் மட்டுமே இருக்கும். . -

கவிகளின் சுற்றுப்புற உணர்ச்சி அழகிய பாட்டாய் வெளிப்பட்டு மனிதர்களைக் கவரலாம். ஆனல் மனிதர் -களின் சுற்றுப்புற உணர்ச்சிதான் மனிதர்களைப் காப் .பாற்ற முடியும். சூழ்ந்திருப்பவர்களின் சுகதுக்கங்களைப் .புரிந்துகொண்டு வாழ்கிற மனிதன் எவனே அவன் வேறு எதையும் வாரி வழங்க முடியாதவனுக இருக்தாலும் அது தாபத்தை மட்டும் வாரி வழங்குகிற வள்ளலாகவாவது இருப்பான். -

பட்டினத்தின் பெரிய வீதிகளில் கான் சொல்லப் போவதைப் போன்ற காட்சிகளை நீங்கள் அடிக்கடி பார்த் திருப்பீர்கள். பட்டப் பகலில் உச்சி வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எழெட்டுப்பேர் உட்கார முடிந்த பெரிய காரில் ஒரே ஒரு மனிதர் உட்கார்ந்து பய ணம் செய்து போய்க்கொண்டிருப்பார்; அவருக்கு வேண் கடியவர்கள், தெரிந்தவர்கள், குழங்தைகள் சிறு பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/146&oldid=598240" இலிருந்து மீள்விக்கப்பட்டது