பக்கம்:புதிய பார்வை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 55.

தெரிந்தால் அப்படிக் கச்சிதமாக முடிக்கிற நன்றியுரைக்கு. நாம் நூறு தரம் ஒன்றி கூறலாம்.

தத்துவ ரீதியாகச் சொன்னல் இங்த உலகமேகூட ஒரு. பெரிய பொதுக்கூட்டம்தான். விதி என்ற மேடையில் இன்பமும், துன்பமும் மாறி மாறிப் பேசுகிற கிகழ்ச்சி கிரலே யார் அமைத்தார்களோ, தெரியவில்லை, சுகதுக்கப் பேச்சாளர்கள் மாறி மாறிப் பேசும் இந்த உலகப் பொதுக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் பேச்சாளர்தான். இன்னும் கன்கு கூறினால் ஒவ்வொருவரும் கூடக் கேட்பவர்தான்.

சுகமோ, துக்கமோ, கூடப் பேசுவது குறையப் பேசுவது தான் அவரவர் பாக்கியத்தைப் பொறுத்த விஷயம். பேச்சுக்கு அடுத்தபடி கூட்டம் சேர்ப்பது திரைப்படம். திரைப்படங்களோ சு க போக க் களஞ்சியங்களாகச்

சித்திரிக்கப்படுகின்றன. - - திரைப்பட சுகங்கள் х

விழிப்பில்லாதபோது காண்கிற சொப்பனங்களேக். கனவுகள் என்று மன்னிக்கலாம். ஆனல் விழித்துக் கொண்டே காண்கிற சொப்பனங்களும் உள்ளன. உழைப் பிலும், அநுபவப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என்பதி லும் கம்பிக்கை குன்றி எந்தவிதத்திலோ மிகக் குறுகின காலத்தில் சொகுசான வாழ்க்கையை அடைய வேண்டும். என்ற ஆசை இப்போது இளைஞர்களிடையே பெருகி வரு கிறது. சொகுசான வாழ்க்கையை அடையவேண்டும் என்று ஆசைப்பட எல்லோருக்கும் உரிமை உண்டுதான். ஆனல் கம்பிக்கையும், நாணயமான உழைப்பில் ஆர்வன மும் குன்றிச் சொகுசான வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப் படுவது சமுதாயத்தின் கியாயமான பலத்தை நாளுக்கு. காள் கலிந்து போகும்படி செய்து விடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். . . .

இங்த நாட்களில் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரி: களிலும் படிக்கிற இளைஞர்களில் பெரும்பாலோர் சினிமா வில் வருகிருற்போன்ற கற்பனைச் சுகவாழ்வுக்கும். கற்பனைக் காதல்களுக்கும் அளவற்று ஆசைப்படுகிருர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நாளைக்கு உருவாக வேண் டிய சமுதாயத்தைப் பற்றி நமக்குப் பயமாயிருக்கிறது.

'ஒப்பில்லாத சமுதாயம் * . . உலகத்துக்கொரு புதுமை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/157&oldid=598262" இலிருந்து மீள்விக்கப்பட்டது