இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நா. பார்த்தசாரதி 6. I
பயனென்ன இருக்க முடியும் பெரியவர்களுடைய உட தேசங்களே மதிக்காமல் அவர்களுடைய பெயர்களை மட்டும் மதிப்பதில் அர்த்தமேயில்லை, அறநூல்களில் விகிதாசார
நம்பிக்கை என்பது பாதிக் கிணறு தாண்டுவதைப் போன்றது. பாதிக் கிணறு தாண்டுவது பயனில்லை; அபாய கரமானதுமாகும்.
சிறிது காலத்திற்கு வள்ளுவரைப் பேசுவதை மறந்து அப்படி வாழ ஆசைப்படுவோம். வள்ளுவர் பேசப்படுவதில் வள்ளுவருக்கும் பெருமையில்லே, நமக்கும் பெருமையில்லே, வள்ளுவர் சொல்படி வாழ்வதே பெருமை. பேசுவதால் வள்ளுவருக்குச் செய்வதைக் காட்டிலும் வாழ்வதால்தான் அதிக மரியாதையை வள்ளுவருக்குச் செய்யமுடியும் என்பது நிச்சயமானது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலி ருந்தாவது அங்த மரியாதையை அவருக்கு அளிக்கலாமா ?