நா. பார்த்தசாரதி 95。
தினகரன் பகலே சோதி திவாகரனரிய மாவே இனனுடன் உதயன் ஞாயிறெல்லேயே கிரணமாலி.
விரவும் ஏழ்பரியோன் வேங்தன் விரிச்சிகன்
-- விரோசனன்பேர் இரவி விண்மணி யருக்கனேழே ழும்சூரியன் பேர் பரிதியின் வட்டம்தானே விசயமாம் பரிதிவீசும் கிரணமே காமு மற்றைக் கிளர்ந்த தீவிரமுமாகும்.
(சூடாமணி நிகண்டு 55, 56, 57)
மேற்படி சூடாமணி கிகண்டின் பாடல்கள் தெய்வம் பெயர்த்தொகுதி என்னும் பிரிவில் காணப்படுவதால் குடா மணி நிகண்டு ஆசிரியரும் சூரிய வழிபாட்டை ஒப்புக்கொள் ளும் குறிப்புத் தெரிகிறது. எட்டுத் தொகையில் நற்றிணை யின் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்,
'மாநிலம்'சேவடி ஆகத் தார்ே வளே கால் பெளவம் உடுக்கை ஆக, விசும்பு மெய்ஆகத் திசைகை ஆக பசுங்கதிர் மதியமொ டு சுடர் கண்ணுக இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப . திதற விளங்கிய திகிரி யோனே'
(கற்றினே-1).
என்ற பாரதம் பாடிய பெருங்தேவனர் பாடலில்-வேத. முதல்வனின் இரண்டு கண்களில் ஒன்ருகச் சூரியன் வருணிக்கப்படுகிருன். இந்தப் பாட்டு இந்துமத அடிப் படை உடையதாயினும் ஒரு யுனிவர்ஸல் பிரேயராகவே. (Universal Prayer) விளங்குவதாயிருக்கிறது. மற்ருேச் எட்டுத் தொகை நூலாகிய புறநானூற்றில்,