பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் வாய்த்தது போல, மகாத்மா காந்திக்கு ஜவாஹர் லால் நேரு வாய்த்திருந்தார். நேருவுக்கு எவ்வளவு வயதாயிருந்தும், அவரை நாம் என்றும் இளைஞரா கவே கருதி வந்தோம். அவருடைய கருத்துக்கள் ஆணித்தரமானவை, அவை பல்லாண்டுகளாக அவர் ஆராய்ந்து அறிந்து போற்றி வந்த உண்மைகள். அவை, சமயத்திற்குத் தகுந்தாற் போல, மக்களையோ, மற்றவர்களையோ மகிழ்விப்பதற்காகக் கூ ற ப் பெற்றவை அல்ல. நேரு தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை நாட்டின் விடுதலைக்காகச் செல விட்டார். சுதந்தரம் வந்த பின்பு, புதிய இந்தி யாவைப் படைக்கும் வேலையை அவர் மேற்கொண் டார். அவருடைய கருத்துக்களை அறிந்து, செயற்படுத் தாமல், அவரை மட்டும் புகழ்ந்து போற்றிக் கொண் டிருத்தல் பயனில்லை. இந்தியாவிலுள்ள அளவற்ற வறு மையையும், வேலையின்மையையும் நீக்கி, மக்கள் அனைவரும் இன்ப வாழ்க்கை அடைவதற்கு ஜனநாய கமும், சோஷலிஸமும் இன்றியமையாதவை என்பது அவர் கொள்கை. சமுதாயம் மேல்நிலை அடைவதில், தனிமனிதனின் சுதந்தரத்தையும் பாதுகாக்க வேண் டும் என்பதையும் அவர் வற்புறுத்திக் காட்டியுள் ளார். நாம் ஜனநாயக அரசாங்கத்தைப் பெற்றி ருக்கிருேம். சோஷலிஸத்தை அடைவது எப்படி ? இதற்கு மூலாதாரமான ஒரே வழி கூட்டுறவு என்று நேரு கருதியுள்ளார். பலாத்காரமில்லாமல், செல்வl களைப் பலவந்தமாக நசுக்காமல், கூட்டுறவு முறை