பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அமைந்து நம்மை உருவாக்கியுள்ளன, இன்று நாம் உள்ள நிலை அவைகளின் விளைவேயாகும். என் தலை முறையைச் சேர்ந்தவர்கள் பல நிகழ்ச்சிகளின் சேர்க் கையால் உருவாக்கப் பெற்று, குறித்த நிலையில் இருக்கும்படி உந்தப்பெற்றுள்ளனர், அந்த நிகழ்ச்சி கள் மறுபடி ஏற்பட முடியாதவை. ஒரு பெரிய மனிதர், ஒரு மாபெரும் தலைவருடன் காங்கள் தொடர்பு கொண்டிருந்தோம், அவர் எங்களை ஆட்டி வைத்தார், எங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றினர், வெறுமே உயிர் சுமந்து வாழும் வழக்கமான வாழ்வி லிருந்து எங்களை வெளியே வரும்படி செய்தார்; அத் துடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை காங்கள் கண்ணரக் கண்டோம், கண்டதுடன், அவை களிலே பங்கும் கொண்டோம். காங்கள் சில சமயங் களில் உயர்ந்த மன எழுச்சியையும், உன்னதமான உணர்ச்சிப் பெருக்கையும் அநுபவித்தோம், இவற். றின் பயனகப் பின்னல் விளையக்கூடிய செயலற்ற தன்மையையும் அநுபவித்தோம்; இனிமேல் கதி மோட்சமில்லை என்றுகூட அவரும்பிக்கை ஏற்பட்டது. நரம்புகளை முறுக்கேற்றிக்கொண்டு தீவிரமான பெருங் காரியங்களில் ஈடுபடும் பொழுது, அதன் விளைவாக, அடுத்தாற்போல் மனத் தளர்ச்சியும் உடல் தளர்ச் சியும் தொடர்ந்து ஏற்படுவது இயற்கை. ஆளுல் நாங்கள் அப்படி அயர்ந்து விழுந்து விடவில்லை. காங்கள் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்திலும், பற்றிக் கொள்ள ஒரு பெரிய தெப்பம் இருந்தது; அசையாத பாறை போலவும், கலங்கரை விளக்கம் போலவும் விளங்கிய எங்கள் தலைவரே அந்தத் தெப்பம்; அத்தகைய தலைவருடன், எங்க2ளக் கவர்ச்சி செய்து ஆட்கொண்ட இயக்கமும் எங்களை உற்சாகப்படுத்தி, எங்களிடமிருந்த சிறந்த ஆற்றல் களை யெல்லாம் பயன்படுத்திக் கொண்டது. அத்