பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 தரத்திற்காக இடைவிடாமல் முயற்சி செய்வதாக அவன் உறுதியான சபதம் செய்திருப்பான். இன்று, இப் போ து இந்தியாவிலுள்ள அரசாங்கத்திற்கு எதிரான துவேஷம் இந்திய மக்களின் அடிப்படைக் கொள்கை யாகிவிட்டது; இந்த அரசாங்கத்தின் தீமையை எதிர்த்துத் துவேஷிப்பதும், துவேஷத்தைப் பரப்புவதும் அவர்களுடைய முக்கியமான தொழிலாகி விட்டது. "கிரிமினல் முறையில் கான் பயமுறுத்தியதாக வும், பணம் பறிக்க முயன்றதாகவும் என்மீது குற்றங் கள் சாட்டப் பெற்றிருக்கின்றன. உண்மையாகவே இப்படியும் குற்றங்கள் சாட்டப் பெற்றிருக்குமா என்று கான் ஆச்சரியப்பட்டேன். சர்க்கார் தரப்புச் சாட்சியங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூட என்மீது சாட்டப் பெற்றிருக்கும் சட்டத்தின் பிரிவு களுக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. அலகா பாத்தில் (ஜவுளிக் கடைகளின் மறியல் சம்பந்தமாக) நாங்கள் செய்த முயற்சிகளில் பெரும் வெற்றி கிடைத்ததால், அது மறியல் செய்பவரின் மீது ஏதா வது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளைத் துாண்டி யிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். அமைதியான முறையில் நியாயமான ஒரு விஷயத்திற்காக மறியல் செய்வது குற்றம் என்றல், அந்தப்படி செய்யும்படி சொல்லி, உதவியும் புரிந்து வந்துள்ள நான் குற்றவாளி தான். பிரிட்டிஷ் இந்தியச் சட்டங்களின் படிகூட அமைதியான மறியல் ஒரு குற்றமாகும் என்பதை நான் இனித்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஜவுளி வியாபாரிகள் முன்பு சேர்ந்து கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றும்படி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய மறியலின் இலட்சியம். இத்தகைய வேலையில் கிரிமினல் முறையில் பய.