பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 காங்கள் பல தடவை மறியல் கடத்தி யிருக்கிறேம். அந்த முறையில் அதன்மீது அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எ டு க் க வி ல் லை. இங்கிலாந்தைப் போல், இந்தியாவிலும், அமைதியான மறியல் செய் தல் குற்றமாகாது என்பது அவர்களுக்கு கன்றகத் தெரியும். அமைதியான மறியலைக்கூடச் சட்ட விரோதம் என்று அவர்கள் பேவைால் எழுதி (சட்டம் செய்து) விட முடியும். ஆனல் அவர்கள் அப்படிச் செய்தாலும் செய்யா விட்டாலும், காங்கள் அதைக் கைவிடப் போவதில்லை. மற்றவர்கள் ஒரு வழியில் செயல் புரிய வேண்டுமென்றே, எதையாவது செய்யா மல் தவிர்க்க வேண்டுமென்ருே வேண்டிக்கொள் எவோ, அறிவுறுத்தவோ, ஆலோசனை கூறவோ எங்களுக்குள்ள உரிமையை காங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அரசாங்கம் என்ன வேண்டுமாயினும் செய்துகொள்ளலாம். இந்த காட்டில் எங்களுக்குள்ள உரிமைகள் மிகச் சிலவே, இவைகளையும் பறிக்க வழி செய்யப் பெறுகின்றது. கூட்டம் கூடும் சுதந்த ரத்தை காங்கள் எவ்வளவு மதிக்கிறேம் என்பதை உலகத்திற்கு கிருபித்து விட்டோம். ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும், அரசாங்க உத்தரவுகள் அனைத்தையும் எதிர்த்தும், நாங்கள் எங்கள் முயற்சிகளைக் கைவிடவில்லை." 平 #: M 'அச்சுறுத்துவதும், பயங்கரமான அடக்கு முறை களைக் கையாள்வதும் அரசாங்கத்தின் முக்கியமான கருவிகளாகி விட்டன. இந்த முறைகளைக் கொண்டு அவர்கள் மக்களை அடக்கி வைக்கவும், அவர்களுடைய துவேஷத்தை கசுக்கவும் முயற்சி செய்கின்றனர். இவைகளால் அவர்கள் ஜனங்களுடைய விசுவாசத் தைப் பெற்றுவிடவோ, அவர்களைத் தங்களுடைய