பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O3 ஏகாதிபத்தியக் கொள்கையின் கருவிகளாகச் செய்து விடவோ முடியுமென்று எதிர்பார்க்கிறர்களா ? அன் பும் விசுவாசமும் இதயத்தில் தோன்றுபவை. அவை களைக் கடைத் தெருவில் வாங்கவும் முடியாது, துப் பாக்கிச் சனியனே நீட்டி அச்சுறுத்திப் பெறவும் முடி யாது. விசுவாசம் என்பது அருமையான ஒரு பொருள். ஆனல் இந்தியாவில் சில வார்த்தைகள் தமக்குரிய பொருளை இழந்து விட்டன. இங்கே இராஜ விசுவாசம் என்பது தாய் காட்டுக்குத் துரோகம் செய்தல் என்றும், இராஜ விசுவாசி என்பவன் தன் கடவுளுக்கும், தாயகத்திற்கும் விசுவாசமில்லாமல், தன் அங்கிய யசமானர்களுக்கு அடிவருடியா யிருப்ப வன் என்றும் பொருள் கொண்டு விட்டன. இங்கி லாந்து படைகளையும் கடற்படைகளையும் கொண்டு வல்லமை பெற்றுள்ள காடு. ஆல்ை இன்று அதை விட வல்லமையுள்ள ஒன்று அதை எதிர்த்து கிற்கின் றது. விடுதலை பெற்றுத் தீரவேண்டும் என்று உறுதி கொண்டுள்ள ஒரு தேசிய சமூகத்தின் துன்பத்தையும் தியாகத்தையும் அதன் படைகளும் கடற்படைகளும் எதிர்த்து கிற்கவேண்டி யிருக்கின்றது. இத்தகைய போராட்டத்தின் முடிவு என்ன என்பதைப் பற்றி எந்த மனிதனும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. காங் கள் எங்கள் சுதந்தரத்திற்காகவும், எங்கள் காட்டின் சுதந்தரத்திற்காகவும், எ ங் க ள் மதத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கிருேம். எந்தத் தேசத் திற்கோ மக்களுக்கோ தீங்கு செய்ய காங்கள் விரும்ப வில்லை. நாங்கள் எவர்கள் மீதும் ஆதிக்கியம் செலுத்த விரும்பவில்லை. ஆனல் எங்கள் சொந்த காட்டில் நாங்கள் பூரணமான சுதந்தரம் பெற்றிருக்க வேண்டும். சென்று 150 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து எங்களுக்குக் கொடுமையாகத் தீங் கிழைத்து விட்டது. ஆயினும் அதற்காக அது இது