பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.11 எனக்குச் சந்தேகமில்லை. இதுவரை இந்த விசாரணை யில் நான் எவ்விதமாகவும் கலந்து கொள்ளவில்லை. இனியும் கலந்து கொள்ளப் போவதில்லை. ஆனல் இன்று என்னை விசாரிப்பவர்களும், அளவுக்கதிகமாக என் இனக் கெளரவித்து வந்துள்ள என் சொந்த மக்களும் என் இதயத்திலுள்ளதை ஒரளவு தெரிந்துகொள்வதற் காக, கான் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். கான் இராஜாங்கத் துவேஷமுண்டாக்கியதாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பு ஏற் படும்படி செய்ததாகவும் குற்றம் சாட்டப் பெற்றிருக் கிறேன். இதே போல எட்டரை ஆண்டுகளுக்கு முன் பும் கான் குற்றம் சாட்டப் பெற்றேன். அப்பொழுது இந்தியாவில் தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிரா கத் துவேஷத்தைப் பரப்புவது இந்திய மக்களின் கொள்கையாகி விட்டது என்றும், அதன் தீமையை எதிர்த்துத் துவேஷம் காட்டுவது அவர்களுடைய முக் கியமான தொழிலாகி விட்டது என்றும் கான் கூறி னேன். ஏனெனில், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியை அப்புறப்படுத்திெைலாழியத் தங்களுக்குச் சுதந்தரம் இராது என்பதையும், கோடிக்கணக்கான மக்களின் உயிரை நசுக்கிப் பயங்கரமாகக் கொள்ளை யடிப்பது குறையாது என்பதையும் இந்திய மக்கள் அறிந்துகொண்டு விட்டார்கள். நானும் இந்தக் கோர மான உண்மையைத் தெரிந்து கொண்டதிலிருந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, அதை இந்தி யாவை விட்டு விரட்டுவதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் கொள்ளாமல், வேறு தொழில் எதுவும் செய் யாமல், வேறு வேலை பாராமல் இருந்து வருகிறேன். 'இந்த ஆண்டு முதல் நாளில், இந்திய தேசிய காங் கிரஸ் இந்தியாவின் பூரண சுதந்தரத்தைப் பெற வேண்டும் என்று இறுதியாகத் தீர்மானித்துள்ளது