பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காந்திக்கு ஜே 11-"மகாத்மா காந்திக்கு வெற்றி 1அவருக்கு நாம் அளிக்க விரும்பிய வெற்றி எது, அவர் அடைய வேண்டிய வெற்றி எது ? வாழ்விலும் சாவி லும் அவர் வெற்றி வீரராகவே விளங்கினர். நீங்களும், ாானும், இந்த அதிருஷ்டமற்ற நாடுமே வெற்றிக்குப் போராடிக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. -டிெ டிெ

  • H 事 k

தலைசிறந்த இந்தியர் அவர் ஒர் இந்துவா யிருந்தார், ஒர் இந்தியரா யிருந்தார், பல தலைமுறைகளில் வந்த மக்களிலே த8ல சிறந்தவரா யிருந்தார், தாம் இந்துவாகவும் இந்திய ராகவும் இருந்ததில் அவர் பெருமை கொண்டிருந் தார்...அவர் மிகுந்த சமயப் பற்றுக் கொண்டிருந்த போதிலும், தாம் விடுதலை வாங்கித் தந்த இந்தத் தேசத்தின் தந்தை என்று அழைக்கப் பெற்ற போதி லும், குறுகிய மதப் பற்றே, தேசியப் பற்றுக்களோ அவருடைய ஆன்மாவைக் கட்டுப்படுத்தி வைத்தி ருக்கவில்லை. ஆகவே அவர் பெரிய சர்வதேச வாதி யாக ஆகிவிட்டார், மானிட சமூகத்தின் அடிப்படை யான ஒற்றுமையில் கம்பிக்கை கொண்டிருந்தார், எல் லாச் சமயங்களினுடைய அடிப்படையான ஒற்று மையை உணர்ந்திருந்தார், மானிட சமூகத்தின் தேவைகளையும் அறிந்திருந்தார், எல்லா இடங்களிலு மிருந்த கோடிக் கணக்கான ஏழைகள், துயரப்படு வோர்களுக்கே முக்கியமாகத் தொண்டு செய்து வர்தார். -புதுடில்லியிலிருந்து ஒலிபரப்பிய பேச்சு, 14-2-48. | +