பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது

படைச் செய்யுள் வேகமும்: எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதி காலப் பழமைய்ைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக் கின்றன.

உதாரணமாகப் பார்த்தால், டி.எஸ். எலியட் என்பவர் புதுக்கவிதை ஆங்கிலத்தில் எழுதுகிருர் என்ருல் அவர் இன்றைக்குரிய ஒரு கோணத்தில், ஒரு முகத்தில் நின்று, இன்றைய வசன கவிதை நடையை மேற்கொண்டு, அதற் கிலக்கணமாக நானூறு வருஷங்களுக்கு முன் எழுதிய ஆங்கில ஆதிகால நாடகாசிரியர்களின் அகவல் பாணியை மேற்கொண்டு, பேச்சுச் சந்தத்துக் கிசைய கவிதை செய் கிருச். இடைக்கால மரபுகளைப் புறக்கணித்து விடுகிரு.ர். ஆளுல் பழைய இலக்கண மரபை அவர் அப்படியே கொள் வதும் இல்லை. இன்றையப் பேச்சு வேகத்துக்கேற்ப சொல் என்று மக்களின் வாயில் வழங்குவதின் அடிப்படையில் கவிதை செய்கிருர், அதே போல எஸ்ரா பவுண்டு என்கிற ஆங்கிலக் கவிஞர் ப்ரோவான்ஸ் கீதங்களையும் சீனத்துக் கவிதைகளையும், ஐப்பானிய ஹோக்குகளையும் தன் மர பாக்கிக் கொண்டு புதுக்கவிதை செய்கிருர், அவருடைய கவிதைப் பாணி இன்று ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிற எல்லோரையும் பாதித்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே கவிதை செய்த வால்ட் விட்மன் வசனத்தையே கவிதையாக்கி வசனத்தையே வரிவரியாக வெட்டிக்காட்டி, விஷய அமைதி தந்து கவியாக வெற்றி பெற்ருர், இன்றைய மொழிகள் பல வற்றிலுள்ள புதுக்கவிதைக்கு பொதலோர், ரிம்போ, மல்லார்மே முதலிய பிரெஞ்சுக் கவிகளையும், வால்ட் விட்மனேயும் தான் ஆதாரமாகச் சொல்லுவார்கள். இவர் களே எல்லாம் பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர விவாதிக்கவில்க். ஏனென்ருல் தமிழில் புதுக் கவிதை விஷயத்துக்கு இவர்கள் புறம்பானவர்கள். ஆல்ை இவர்கள் செய்திருப்பது என்னவென்ருல் அன்று ஆட்சி செலுத்திய