பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

5

கேரட்டத்தில் மேஸ்திரி ஒருவரே எண்னத் தொலையுமோ இன்னே?

எழுத்து புதுக் கவிதை முயற்சிகளுக்குத் தந்த ஆதரவைக் கண்டு உற்சாகம் பெற்று, மா. இளேயபெருமாள், கி. கஸ்தூரிரங்கன், சி. பழனிசாமி, சக்ரதாரி, சுப. கோ. நாராயணசாமி, ஆகியோரும் இவ் வருடத்தில் கவிதைப் படைப்பில் ஈடுபட்டார்கள். எல்லாம் ரசிக்க வேண்டியபாராட்டுதலுக்கு உரிய - படைப்புகளேயாகும். o

"எழுத்து 14வது ஏட்டிலேதான் ஆசிரியர் புதுக் கவிதை பற்றி பிரஸ்தாபிக்கத் துணிந்துள்ளார்.

பழங்கவிதை புதுக் கவிதை என்று அதிகம் இப்போது பாகுபடுத்திப் பேசிக்கொள்கிருேம். புதுக் கவிதை முயற்சிகள் என்று ஒருவகை கவிதைகளுக்குப் பெய்ர் சூட்டி, அதற்கு தருகிருேம். தமிழ்க் கவிதை முயற்சிகள் என்று ஒருவகை கவிதைகளுக்குப் பெயர் சூட்டி, அதற்கு இடம் தருகிருேம். தமிழ்க் கவிதையைத் தனியான ஒரு பாதையில், திருப்பி விட்ட பாரதியின் தனித் தன்மையை ஏற்றுக்கொண்ட பின், அதற்குப் பிறகு அவ்வப்போது தோன்றும் ஆற்றல்கொண்ட வர்களது சோதனைப் படைப்புகளுக்கும் ஒரு அந்தஸ்து, ஒரு இடம் இருக்கிறது. ஆளுல் இந்தப் புது கவிதை முயற்சி எந்த அடிப்படையில் எந்த அளவுக்கு பழங்கவிதையிலி ருந்து மாறுபட்டு நிற்கிறது என்பதை எல்லாம் ஆராய்வதற் கான அளவுக்கு புதுக்கவிதை வளம் பெருகவில்லை என்ற ஒரு நினைப்பும் இருந்து வருகிறது. இந்த எட்டில் பிச்ச மூர்த்தி வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர். இன்று புதுக்கவிதை சோதனை ஆரம்பித்து வைத்த முதல்வர் பிச்சமூர்த்தி. புதுக் கருத்துக்கள் ஆதாரத்துடன் அழுத்த மாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ள கட்டுரை அது." <!