பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#09

வேறுவிதமாகக் கூறினுல், பொறிகள் தங்கள் தங்கள் தொழில்களேப் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும் என்று தத்வரீதியாகக் கொள்ளலாம். கவிதையின் ஒருமைப்பட்ட, உடனடியாக அனுபவத்தை விளைவிப்பது ஆருவது பொறி யாகிய மனமேயாகும், பொறிகள் தபால்காரனைப் போல், செய்தி என்று உணரும் சக்தி மனத்திற்குத்தான் உண்டு. எனவே தான் பொறிகள் தனித் தன்மையை இழந்து, பதிவி யாகக்கூட இயங்கி கவிதை யென்னும் விளைவுக்குக் கருவியா கின்றன; -

நாக்கின் தொழிலக் காது மேற்கொள்வது போல, காதின் தொழிலைக் கண் ஏன் ஏற்க முடியாது? முடியும் என்று கவிஞன் கண்ட பொழுது தோன்றியது தான் வசன கவிதை, இந்தக் காரணத்தாலேயே அச்சு இயந்திரம் தோன்றிய பிறகே வசன கவிதை சாத்யமாயிற்று. காதை அடிப்படை யாகக் கொண்ட எதுகை மோனேகளுக்கு இப்பொழுது அவசியமில்லாமல் போய் விட்ட தென்பது கசப்பான புதிய உண்மை.

எதுகை மோனேகளாலும், சந்தத்தாலும் கவிதைக்கு கிடைத்து வந்த இசைப் பயனே ஸ்தூல நிலையிலிருந்து சூகஷ்ம நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதை முறை சாத்யமாகி விட்டது. சொற்களேத் தொடுக்கும் ஜாலத்தாலேயே கவிதை யின் பிறப்பிடத்திலேயே அதை எழுப்பிக் காட்டும் கடின மான கவிதைக் கலைக்குத் தூண்டுதல் ஏற்பட்டு விட்டது. இசையை இசைவாக மாற்ற வேண்டிய கடமை உண்டாகி விட்டது எனவே பல கோடி ஒலி அமைப்புகளிலே சிலவற். றைத் தேர்ந்தெடுத்துக் கவிதையில் ஒலி இன்பத்தைக் கூட்டு வது போல பல கருத்துக்களையும் உணர்ச்சிகளேயும் பொறுக்கி எடுத்து இசைய வைக்கும் முயற்சி புதிய கவிதை ஆயிற்று யாப்புக்கிணங்காத வகை என்று குறிப்பிடுவதற் காகவே கவிதை என்ற சொல்லுடன் வசன என்ற சொல்ல யும் சேர்த்து இப்புதிய முறையைக் குறிப்பிடுகிருர்கள். பார்த்தால் வசனம்; பாய்ந்தால் நெஞ்சில் பாய்ந்தால்கவிதை.