பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

கொண்டு, தனித்து குறிப்பிடப்படுவது. வாழ்க்கையும் மனே பாவனையும் ஒரு கலேப்பாங்கான உள்ளத்தில் பொறிகளால் பாதிக்கப்பட்ட சில மனப்பதிவுகளே ஏற்றுகின்றன. இந்த மனப்பதிவுகளே உணர்ச்சி ரீதியாக உரைத்துப் பார்க்கும் கவிஞன் அதை மொழியின் மூலம் இறுகிய, உறைந்த நடையில் கொடுக்கிருன். இந்த நடையில் அர்த்தவலுவுடன் செழிப்புடன் ஒரு அழகும் இருக்கிறது. அழகுடன் ஒரு இசைத்தன்மையும் (மியூசிகாலிட்டி) இருக்கும்.

இந்த இசைத்தன்மைதான் கவிதையை வசனத்தி லிருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆளுல் இசைத்தன்மை என்பதை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கவிதைத் துறையில் குறிப்பிட வேண்டும். சங்கீதத்துக்கு உரிய அளவு தேவையான இசைத்தன்மைக்கும் கவிதைக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் உள்ள வித்தி யாசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் -அசந்து மறந்துகூட -குழப்பிக் கொள்ளக் கூடாது. வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவே கவிதைக்கும் சங்கீதத் துக்கும் உரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவரது படைப்புகள் கவித்தரம் குறைந்துதான் காண்கின்றன என்பதைச் சொல் லித்தான் ஆகவேண்டும், இன்று அவரது அத்தகைய படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று கருதும் ஒருஏற்புநிலை ஏற்பட்டிருக் கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது.

எனவே கவிதைக்கு வேண்டிய இசைத்தன்மை பிச்சமூர்த்தி கூறி பதுபோல சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒரு ஒயுமொலி என்பதுதான் முக்கியம். ஒயுமொலி சொப்பனக் குரல் மாதிரி நம் காதுகளில் தாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த ஒயும் ஒலி சொப்பனக் குரல்தான் ஒலிநயம் என்று சொல் கிருேமே அந்த மென்மையான இசைத்தன்மை வாய்ந்தது. இந்த ஒலிநயம் சுருதி மீட்டலாக ஓடும் கவிதையில், வசனத்

புது-8