பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2%

கதவை மூடு வேறு தொனியில் அமைந்துள்ளது. ஆயினும், இதிலும் விரக்தியே மேலோங்கி நிற்கிறது.

கதவை மூடு - 3. விங்கி விரிந்த மாநிலம் துவண்டு விழுந்தால் ஆற4-; வாழவிட்ட பூமகள் 桑 சாய்ந்ததும் செரித்திடுவாள்; அபூர்வமாய் பெற்ற மகளுய் நீ வளர்த்த நாயும் கடிக்கும்: நோய் பிடிக்க கடனேற நீயே

உனக்கு எதிராவாய்: கதவை மூடு, கதவை மூடு.

நகையாய் வெறுத்த உடை நலிந்ததும் கூடையிலே: பூவையர் குழல் பூச்சரம் வாடியதும் குப்பையிலே; விளங்க வந்த மனே விளக்கு மாத முடிவில் மூலேயிலே, வானுக்கு உயிரூட்டி சிரித்தேகும் எரிகல் - உதிர்ந்ததும் ஒன்றுமில்லே காற்றேன்? மூச்சேன்? கதவை மூடு கதவை மூடு.

கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து விட்டார்கள். இன்னும் பாடிக் கொண்டிருக்கிருர்கள். என்ருலும், நிலவை ரசிப்பதிலும் வியந்து பாராட்டுவதிலும் மனித மனசுக்கு அலுப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.

நிலவை புதியதோர் கோணத்தில் பார்த்து (புதுக்) கவிதை செய்தார் எஸ். வைதீஸ்வரன். அருமையான படைப்பு. எழுத்து வில் வந்த அவருடைய முதல் கவிதை இதுதான். 34-5 என்று இரட்டை இலக்கமிட்ட ஏட்டில் பிரசுரமாயிற்று.