பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i36

என்று நாட்டின் நிலையும் கட்டிக் காட்டப்படுள்ளது இதில்,

கே. அய்யப்ப பணிக்கர் கேரளத்தில் கவிதை உலகில் தனி இடம் பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிறந்ததான குருக்ஷேத்திரம்' எனும் நெடும் கவிதையை நகுலன், மலையாளத்திலிருந்து தமிழாக்கினர். அது எழுத்து 48-வது இதழில் வந்தது. -

1962-ன் பெரிய சாதனை பிச்சமூர்த்தி கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்த தும், புதுக் குரல்கள் தொகுப்பை தயாரித்து வெளி விட்டதும் ஆகும்.

ந. பி. 1938 முதல் 1962 முடிய எழுதிய கவிதைகளில், தேர்ந்தெடுத்த 35 கவிதைகள் கொண்ட தொகுப்பு காட்டு வாத்து’.

அதன் முன்னுரையில-எதிர்நீச்சு என்ற தலைப்பில்பிச்சமூர்த்தி எழுதியுள்ள கருத்துக்கள் இவை- .

"இம் முயற்சி ஆற்றில் எதிர்நீச்சல் போடும் முயற்சி, பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி. இம்மாதிரி கவிதையின் அமைப்பு முறையில் அனுபவத்தால் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே போகும். இலக்கண வரையறை என்று எதுவும் லேசில் அகப்பட்டு விடாது என்பதும் எனக்குத் தெரிந்தது. இத் தொகுப்பிலும் அந்த மாறுதலைக் காணலாம். முடிவான முறையைக் கண்டு விட்டேன் என்று சொல்ல மாட்டேன். மற்றபடி கவிதை களின் வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது என் வேலையன்று. .

ஆல்ை இரண்டொரு பொது விஷயங்களை மட்டும் கூறலாம். கவிதை கவிதையாக இருந்திருக்கிறது. வர லாருக இருந்திருக்கிறது. மதத்தின் குரலாக இருந்திருக் கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை கானும் என்று தோன்றுகிறது. காதல் மட்டும்