பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

குறிப்பிடத்தக்கவர்கள். புதிய தொனியும் நூதன நடையும் நவீன படிமப் பிரயோகமும் அவைகளில் தெரிந்தன. விஞ்ஞான, இதர தொழில்துறை தகவல்களை உள்ளடக்கிய குறியீடுகள். பயணுகும் சொற்கள் பொருத்தப்பட்டு ஒரு புதிய பாணியே தோன்றியது.

ஒரு வரிக்கு இத்தனை சீர் இருந்தால் இந்த ரக கவிதை என்று. ஒரு வரியின் நீளம் சம்பந்தமாக ஏற்கெனவே வலிந்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பைவிட ஒரு நிறுத்து பேச்சு அல்லது சிந்தனைப் போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பினால் நிர்ணயிக்கப்படும் ஒரு வரி நீளம் மேல் என்று ஃபிரெஞ்சு சுயேச்சா கவிதை சோதனைக்காரர்கள் கூறியது இவர்களை பாதித்தது. அதே சமயம் ஒவ்வொரு வரியும் அடிநாதமாக இடையருத ஒலிநயம் (ரிதுமிக் கான்ஸ்டென்ட்) கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினதையும் மனதில் போட்டுக் கொண்டார்கள். ஒரே தொகை அசை, சீர்களைப் பயன் படுத்துகிறபோது, திரும்பத் திரும்ப ஒரே விதமான ஓசை நய சப்தம்தான் விஜளகிறது. மரபான கவிதை இந்த விதமான ஒரு இடையருத ஓசை நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆளுல் சுயேச்சா கவிதையோ தன் இ_iளடக்கத்துக்கும் பேச்சுக் குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்பட்ட தேவைக்கு ஏற்ப வேறுபடும் ஒரு ஓசை நயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்பது அவர்கள் கருத்து. இந்த இடையருத ஒலிநயத்தோடு அவர்கள் ஒன்றிப்பையும் பாட்டர்ன் என்கிருேமே-ஒருவித *தினிசு அதையும் சாதிக்க ஒரு வரிக்குள்ளேயே நிறுத்து களே அளவமைய அமைத்தல், மோனை, கோடென்ஸ்? என்கிருேமே குரல் இறக்கம் ஏற்றம், ஒரொரு சமயம் சந்தமும்கூட, ஆகிய சாதனங்களை சிபார்சு செய்தார்கள், ஆக, மொத்தத்தில், இன்று கவிதை வெளியிட வேண்டி யிருக்கிற புதிய விஷயத்துக்கு இடம் கொடுக்க சந்தக்