பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళీ3

அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சி களையும் எண்ணங்களையும் எழுத்துகளாக்கிக் கொண்டு தான் இருக்கிருக்கள். எதை எடுத்தாலும், அதற்கு அயல் நாட்டு தத்துவப் பெயரைச் சூட்டி விட்டால்தான் விமர்சனம் பூர்த்தி பெற்றதாகும் என்ற நிளேப்போடு விமர்சிக்க முற்படுகிறவர்கள் தங்கள் அறிவுப் பிரகாசத்தையும் மேதைத் தனத்தையும் வெளிப்படுத்தவே ஆசைப்படுகிருர்கள்.

புதுக்குரல்கள் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஐந்து (ந. பி. கு. ப. ரா. கவிதைகள்) எழுத்து காலத்துக்கு முற்பட்டவை. மற்றவை 1959-62க்கு உட்பட்ட நான்கு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை.

மா. இளேயபெருமாள் 1. கி. கஸ்தூரி ரங்கன் 2. இ. எஸ். கந்தசாமி 2. சு. சங்கர சுப்ரமண்யன் 2. எஸ். சரவண பவானந்தன் 1. பெ. கோ. சுந்தரராஜன் 2. பேரை சுப்ரமண்யன் 1. சி. சு. செல்லப்பா 3. தரும சிவராமு 8 டி. கே. துரைஸ்வாமி 4 டி. ஜி. நாராயணசாமி சுப. கோ. நாராயணசாமி 1 சுந்தர ரரமசாமி 5 ந. பிச்சமூர்த்தி 2 யோ. பெனடிக்ட் சி. மணி 3 க. நா. சுப்ரமண்யம் 2. ஞா. மாணிக்கவாசகன் 1. முருகையன் கே. எஸ். ராமமூர்த்தி 1. கு. ப. ராஜகோபாலன் 3. வல்லிக்கண்ணன் 4. தி. சோ. வேணுகோபாலன் 6. எஸ். வைத்தீஸ்வரன் 5. ஆக 24 கவிகளின் 63 கவிதைகள்.

"கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக் காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது என்ற ந. பி. யின் வினக்கத்தை நிரூபிக்கும் அருமையான கவிதை கள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவ்வாருன கவிதை களிலும் ஒரு ஒலிநயம் இருப்பதை ரசிகர்கள் உணர முடியும். - . ,

தமிழுக்குப் புதுமையானது இத்தொகுப்பு. இதுபோன்ற தொகுப்புகள் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது: