பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4% இவன் திக்கிலே தெளிவு பெறவேண்டும். இப்படி நோயுடன் மருந்தையும் பற்றிய மனத்தின் குரலே தமிழில் புதுக்கவிதை யின் குரல். வாழ்வை நையாண்டி செய்யும் எதிர்மறையில் நேசித்துக் குரல்வகை காட்டினுலும், வாழ்வின் ஆக்க உடன்பாட்டில் கலையின் ஒளியைக் காட்டுவதாகும். ஏதேனும் குறித்த தத்துவம் இதற்கு உண்டா என்ருல் மனத்தின் தத்துவம் இது தழுவியிருப்பது எனக் கூறலாம். இந்த மனத்தின் தத்துவத்திற்குள் எவ்வளவோ பல அறிவுத் துறைகளின் புதிய பழைய புறநிலக் கருத்துக்களும் உள்முகப் போக்குவரவும், வேண்டுமாளுல் உள்ளடங்கு தலும் செய்வது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. (எழுத்து 51) - மனித வாழ்வும், சுய அனுபவங்களும், இதர பாதிப்பு களும் ஏற்படுத்துகிற மனப்பதிவுகளையும் கருத்தோட்டங் களையும் கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக எழுதி வந்தவர்களோடு, அவ்வப்போது புதியவர்கள் சிலரும் இம் முயற்சியில் ஆர்வத்தோடு இறங்கினர்கள்.

இவர்களது படைப்புகளுக்கு எழுத்து நல்ல ஆதரவு தந்தது;பாராட்டத் தகுந்த, ரசனைக்குரிய,இக்கவிதைகள் பல வற்றையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது இயலாத காரியம் ஆகும். . . . *

என்ருலும் முக்கியமான ஒரு சிலவற்றை அவற்றின் தனித்தன்மைக்காக-எடுத்து எழுத வேண்டியது அவசிய மாகிறது. . . . .சுந்தர ராமசாமி எழுதிய காலம் எழுத்து (51) அருமை யான கவிதை ஆகும். . , ,

'மணியின் முள்ளில் காலமில்லை.

காலமோ- . - > ベ என்று துவங்கும் அந்தக் கவிதை சிறிது நீளமானது தான். கருத்தாழமும் நயங்களும் நிறைந்த அக்கவிதையில் காலத்தைப்பற்றிய எண்ண ஓட்டம் படிப்படியாக வளர்' கிறது. பிறகு