பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரனவூரில் - ஆஜராகி வேலே ஏற்க :பான் பெற்ற காலாவதி.

மணியின் முள்ளில் காலமில்லை அக்கினியைத் தேடி அலேந்த மனசோ அடுப்பாய்ப் புகையுது. பிச்சமூர்த்தி எழுதிய வழித்துணை’ எனும் நெடுங்கவிதை 53வது ஏட்டில் பிரசுரமாயிற்று. புதுக்கவிதையில் இன்னுெரு மைல்கல்’ என்று இதை வரவேற்று எழுத்து அதே இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு என்று சி கனகசபாபதி இதை விவரித்தும் விமர் சித்தும் தனிக்கட்டுரை எழுதினர். (எழுத்து 5.)

பிகூடிவின் 1960 காலக் கவிதைகளே இரண்டாவது கட்டக் கவிதைகள்’ என்று மொத்தமாக, தனியாக, ஆராய வேண்டும் என, அவரது முதல் கட்டக் கவிதைகள்: (1934-1964) பற்றி எழுதியபோதே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, ந. பி. யின் கவிதைகள் பற்றிய என் எண்ணங்களே இத்தொடரில் அங்கங்கே நான் குறிப்பிடவில்லை. வழித் துணை பற்றியும் அப்படியே,

புதிதாகக் கவிதை எழுத முற்பட்டவர்களில், நா. வெங் கட்ராமன் புதிய எண்ணங்களே தம் படைப்புகளில் கொண்டு வர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இயற்கைக் காட்சி களோடு விஞ்ஞான உண்மைகளையும் கவிதைப் பொருளாக்க வேண்டும் எனும் புதுக் கவிஞர்களின் துடிப்பு அவருக்கு உண்டு என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. 'பிரசவம்' என்ற கவிதையை ஒரு உதாரணமாகக் கூறலாம்.

ரவிக் கையின் சூடு கடல் நீரைப் புகையாக்கி விண்ணேற்ற. காற்ருேட்ட, - மலேமறிக்க

மழை பெய்யும்,